காளையார் கோயிலிலிருந்து 34 கி. மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சூரியன் நீலரத்தினத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். துர்வாச முனிவரின் சாபத்தால் ஆட்டுத்தலையும், யானையின் உடலும் பெற்ற ஒரு முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வணங்கி சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் இத்தலம் 'ஆடானை' என்று அழைக்கப்படுகிறது. |